புதன், 4 ஜூன், 2014

குருப்பெயர்ச்சி பலன்கள் பகுதி-2 2014-2015

குருப்பெயர்ச்சி பலன்கள் பகுதி-2 2014-2015



மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர்களே! நீங்கள் எந்த விஷயத்திலும் இறங்கினாலும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு   யோசித்து செயல்படுவீர்கள். இதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி உங்களின் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்.  இதனால் மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நேரான வகையில் சிந்திப்பீர்கள். அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும்  சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.

செய்தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குருபகவானின் பார்வை எட்டாம் ராசியின் மீது படிகிறது. இதனால் நெடுநாட்களாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடல் உபாதைகள் நீங்கும்.  சண்டை சச்சரவுகள் இல்லாமல் செயல்படுவீர்கள். ஆனாலும், முழுமையான வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். ஆன்மிக அறிவை வளர்த் துக் கொள்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உதவிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். மனதிலிருந்த தீய எண்ணங்கள் மறைந்து நேர்மையாக சிந்திக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வாக்கு சாதூர்யத்தால் அனைவரையும் வெற்றி கொள்வீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் சுலபமாகப் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடன் தொல் லைகளிலிருந்து விடுபடுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்களின் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் ராசியில் படிகிறது. இதனால் ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். இழப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரிசெய்து விடுவீர்கள்.

கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கடன் தொல்லை இல்லாவிட்டாலும் பொருளாதாரம் சிறிது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களால் உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். வருமானம் சீராக இருக்கும். சிறிய தடை ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

வியாபாரிகள் திருப்தியாக வியாபாரத்தை நடத்து வீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை தனித்தன்மையுடன் நேர்த்தியாகச் செய்வீர்கள். சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக் கொல்லிகளுக்கு செலவு செய்ய நேரிடும். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் திறமைக்கேற்ற பொறுப்புகள் கிடைக்கும். நேரடியாகத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கி விடுவார்கள். பிறரின் வலிமையை அறிந்து அதற்கேற்றார்போல் பேசுவீர்கள்.

கலைத்துறையினர் செய்தொழிலில் போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் உதவியுடன் தொழிலில் புதிய  நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். அவர்களுடனான கூட்டு முயற்சியில் சில வெற்றிகளைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல்  ஆரோக்யம் மேம்படும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்களால் குடும்பம் முன்னேற்றம் அடையும்.

மாணவமணிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் அனாவசியப்  பேச்சு வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை தலங்களுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: கந்த சஷ்டி கவசத்தைஅன்றாடம் பாராயணம் செய்தும், “ஓம் சரவணபவஎன்ற மந்திரத்தை தினமும் 11 முறையும் சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மலர் பரிகாரம்: செவ்வரளிமலரை ஏதேனும் கோயிலில் அருள்பாலிக்கும் முருகனுக்கோ அல்லது அம்மனுக்கோ சார்த்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி. தேய்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக