செவ்வாய், 10 ஜூன், 2014

வீரபத்திரன் - வினைகளை கொல்பவன்

தனது தந்தை தட்சன் செய்யும் வேள்வியினை பற்றி கேள்வியுற்ற தாட்சாயணி அவனது தவறை எடுத்துக் கூறி திருத்தும் பொருட்டு கணவரான ஈசனிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையை அடைந்தாள். தாட்சாயணியை கண்டதும் கொடிய வார்த்தைகளால் இகழ்ந்தான் தட்சன்.

இதனால் கோபம் அடைந்த தாட்சாயணி கயிலை திரும்பி, தட்சனுக்கு அறிவூட்டும் வகையில் அந்த யாகத்தை அழிக்கும்படி பெருமானிடம் வேண்டினாள். இதனால் ஈசன் அவரது கண்டத்திலிருந்த ஆலகால விஷத்தின் ஒரு பங்கு அவரது நெற்றிக் கண் வழியே சிவா உருவாய் வெளிப்பட்டது. அந்த வடிவம் ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றிற்கு ஆயுதங்களும் கொண்டவனாய் இருந்தான். கபால மாலைகள், மணி மாலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றிக் கொம்பு மாலைகள் ஆகியவற்றை தாங்கி, சிங்க முகங்களை கோர்த்த பாம்பாலான ஆடை அணிந்திருந்தான். இவனே வீரபத்திரன் என அழைக்கப்பட்டான்.

சிவபெருமானின் திருவுருவான வீரபத்ரனும், அன்னையால் உருவான பத்ரகாளியும் தட்சனின் யாகத்தை அழித்த விதம் புராணங் களில், இலக்கியங்களில் உள்ளன. வீரபத்திரன் ஆலயங்கள் அநேகமாக வடக்கு நோக்கியே உள்ளன. மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி, கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் தலையின் முன் உச்சியில் சிவலிங்கம் காணப்படுகிறது.

ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரீ.


ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷாய தீமஹி
தந்நோ வீரபத்திரஹ் ப்ரசோதயாத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக