ஞாயிறு, 8 ஜூன், 2014


சோமவார விரதம் இருக்கும் முறை

சோமவார விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். திங்கள் தோறும் விரதமிருந்து, குளித்து ஒருவேளை உணவு தவிர்த்து, சிவன் கோவிலில் தீபம் ஏற்றி, ஏற்ற பதிகம் பாடி சிவனை தரிசித்து, சோமவார விரதம் இருக்கவேண்டும். இவ்வாறு,பதினாறு சோம வாரம் விரதங்கள் முடித்து மறுநாள் விடியலில் 16 லட்டுகள் தயாரித்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தந்து, தானும் சாப்பிடவேண்டும். பசு மாட்டிற்கு ஒரு லட்டைக் கொடுத்து, மீதி ஒரு லட்டை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்து, விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்ய வேண்டும். யாரிடமும் அன்று, கோபம் கொள்ளக்கூடாது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு ஈசன் அவரவர் வேண்டும் பலனை கட்டாயம் தருவார் என்பது உண்மை.

அன்பர்கள் சோமவார விரத லட்டு செய்யும் விதம் இங்கு கூறுகிறோம்.

1/4 கிலோ சுத்த நெய்
1/2 கிலோ சலித்த கோதுமை மாவு
400 கிராம் தூய வெல்லம்

கோதுமை மாவை வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய தூய நெய், பொடி செய்த வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு, மெல்ல சூடாக்கி இறக்கி பின் சிறிய சிறிய உருண்டைகளாக லட்டு பிடிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக