ஞாயிறு, 8 ஜூன், 2014

ஓம் நமசிவாய

வெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே .. என்பது மணிவாசகர் கருத்து.
சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந்துழலும் சமயநெறி புகுதவேண்டா முத்திதரும்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே
எனும் தாயுமானார் திருவாக்கை உணர்க.
சைவ வழி என்பது தளிர்த்துப் பூத்துக் காய்க்கும் ஒரு தருவை போன்றது. அதன் எல்லா பகுதியையும் சைவனே அனுபவிப்பான். சிவன் வழி மாறி, சிவனருளாலே, அவன் அருமை காணவேண்டி, அவன் விதித்தபடி புற மதம் புகுந்த ஒருவன் நிழல் மட்டும் அணுகி, பின் பல மரணம் எய்தி தருவை எட்டிய குருவியாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக