புதன், 3 மே, 2017

மூன்றாவது உலக போர் வருவதை மூன்கூட்டி எச்சரிக்கை செய்யும் சிவன் மலை ஆண்டவர்


மூன்றாவது உலக போர் வருவதை மூன்கூட்டி எச்சரிக்கை செய்யும்
சிவன் மலை ஆண்டவர்
சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை  வைத்து பூஜை

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843


சிவன்மலை சுப்பிரமணிசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

காங்கேயம் சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று 03.05.2017 முதல் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை இந்த பெட்டிக்குள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம்.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843
இந்த முறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார்.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என இரண்டு பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். பின்னர் அதற்கு தினமும் பூஜை செய்யப்படும்.

உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் கிடையாது. மற்றொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படும். இவ்வாறு, உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்தப் பொருள் நாட்டில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அதன்படி, இதற்கு முன் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை உலக உருண்டை வந்து உள்ளது .
இது மூன்றாவது உலக போருக்கு அறிகுறி யா என தெரியவில்லை.
எல்லாம் சிவமயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக