திங்கள், 8 மே, 2017

வாராரு அழகர் வாராரு அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் புறப்படுகிறார் KALLALAGAR

வாராரு அழகர் வாராரு அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் புறப்படுகிறார்








 இன்று 08-05-2017
கள்ளழகர் புறப்படுகிறார் பக்தர்களை நேரில் சந்தித்து ஆசி வழங்க இன்று மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் மே 10ம் தேதி மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவில் சித்திரை திருவிழா மே 6ம் தேதி துவங்கியது.
முதல் 2 நாட்களும் தோளுக்கினியான் அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சித்திரை திருவிழாவின் முக்கியமான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10 ல் நடக்கிறது. இதற்காக இன்று மாலை 5:20 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

கோயில் முன் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழியானவுடன் கொம்பு சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் ராஜ கோபுரத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் 18ம் படி
கருப்பண்ண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7:00 மணிக்கு மேள, தாளம் முழங்க புறப்படுகிறார்.

                                                   18ம் படி கருப்பண்ண சுவாமி



அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டகபடிகளில் எழுந்தருளி, நாளை காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து
புதூரிலும், மாலையில் அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843
நள்ளிரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடையும் கள்ளழகருக்கு திருமஞ்சணம் நடக்கிறது






.அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் காலை 6:15 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் ஆற்றில் இறங்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக